திமுகவிலிருந்து 7 நிர்வாகிகள் அதிரடி நீக்கம்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


திமுகவிலிருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி கழக செயலாளர் எஸ் கே செந்தில் குமார், தர்மபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூராட்சியை சேர்ந்த ஆனந்தன், ரகுமான் ஷான். தஞ்சை வடக்கு மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK 7 admins temporary suspend DuraiMurugan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->