#BigBreaking || அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு.! ராயபுரம் சம்பவம் எதிரொலி.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியது சம்பந்தமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் இருக்கக்கூடிய நாற்பத்தி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், திமுகவினர் அத்துமீறி வாக்குச் சாவடிக்குள் புகுந்து கள்ள வாக்கு போட முயன்றதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள், ஒரு சிலரை விரட்டிச் சென்றனர்.

அப்போது அதில் ஒருவர் கையில் சிக்கவே, அவரின் சட்டையை கழட்டி தெரு வழியாக இழுத்து வந்து தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதில் அந்த நபர் தாக்கப்பட்டதாக கூறி தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhandayarpet Police Case File Against ADMK Ex Minister Jeyakumar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->