டெல்லி மாநகராட்சி தேர்தல் : ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும்.. வெளியான கருத்து கணிப்பு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கும் நேற்று (டிசம்பர் 4ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மொத்தமுள்ள 250 வார்டுகளில் 69 முதல் 91 வார்டுகளையே பாஜக கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi corporation election aam Aadmi party won many places exit poll


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->