பீகாரில் காங்கிரஸ்-க்கு மரண அடி..! திமுகவையே நம்ப வேண்டிய சூழலில் காங்கிரஸ்! நாதியற்றுப்போன காங்கிரஸ்! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!
Death blow to Congress in Bihar Congress in a situation where it has to rely on DMK Congress is out of breath Vijay starts the game
பீகார் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிப் பங்கீட்டில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த முடிவுகள் தாக்கம் செலுத்தியுள்ளன. தேர்தலுக்கு முன்பும் பிறகும் காங்கிரஸின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. காமராஜர் கால ஆட்சியைத் திரும்பப் பெற வேண்டும், கூட்டணியில் பெரும்பங்கு வேண்டும், அமைச்சரவை பங்கீட்டிலும் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் துணிச்சலுடன் வைக்கப்பட்டன. சிலர் கூட தவெகவுடன் கூட்டணி அமைத்தால் பாதி தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என கணக்கிட்டனர்.
ஆனால் பீகார் தேர்தல் முடிவு அந்த கனவுகளை முற்றிலும் உடைத்துவிட்டது.
243 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட 61 இடங்களில் வெறும் 6-இடங்கள் மட்டுமே வெற்றி — இது தேசிய அளவில் கட்சியின் பலவீன நிலையை நிரூபித்துவிட்டது. இதேபோல் அங்கிருந்த முக்கிய மாற்று சக்தியாக பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோரிின் ஜன் சுராஜ் கட்சியும் ஒரு இடத்தையும் கூட வெல்லவில்லை. இது, “ஒரு வியூக நிபுணருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால், கட்டமைப்பு இல்லாத தவெகவை மட்டும் நம்பி சென்றால் என்ன ஆகும்?” என்ற பெரும் சந்தேகத்தை காங்கிரஸில் எழச் செய்துள்ளது.
தமிழக காங்கிரஸ் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனை — கட்சிக்குள் இளைஞர்கள் வரவில்லாதது.கன்னியாகுமரியைத் தவிர இளைஞர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பிப் பார்க்காத நிலை. பாஜக எதிர்ப்பு என்ற ஒரே கோஷத்தில் கட்சி பிழைத்து வந்தது; ஆனால் அதுவே போதாது என்பதை பீகார் முடிவு கடுமையாக உணர்த்தியுள்ளது.
இந்த சூழலில் தவெகவை நோக்கி இருந்த காங்கிரஸின் பார்வை இன்று மாறியுள்ளது.தவெகவை நம்புவது அபாயகரம் என அவர்கள் தெளிவாக உணர்ந்து வருகின்றனர்.ஒரே தேர்தலில் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ஜன் சுராஜ் கட்சியின் நிலைமை, தவெகவைப் பற்றிய காங்கிரஸின் கணக்கை முற்றிலும் தள்ளி வைத்து விட்டது.
இதனால் திமுகவையே நம்புவது தான் பாதுகாப்பான கூட்டணி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.
பீகார் தேர்தல் முடிவு, காங்கிரஸின் தொகுதிய்ப் பங்கீட்டையும், அரசியல் கோரிக்கைகளையும் பல கட்டாக குறைத்துவிட்டது என்று சொல்லலாம்.
தெளிவாகச் சொல்வதானால்—பீகார் தேர்தல் முடிவு, தமிழக காங்கிரஸை“தவெக கூட்டணி” கனவில் இருந்து“திமுகவிடம் மீண்டும் சேர வேண்டிய கட்டாயத்தில்” தள்ளி விட்டது.
English Summary
Death blow to Congress in Bihar Congress in a situation where it has to rely on DMK Congress is out of breath Vijay starts the game