#BREAKING : சென்னை உயர்நீதிமன்றத்தில்., முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு.!
CV Shanmugam CASE FILE HighCourt
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக பல்கலைகழகம் உருவாக்கப்படும் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விழுப்புரம் நகரில் உள்ள பழைய பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைகழகத்தை திறந்து வைத்தார்.
விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பெரிது வரவேற்பு அளித்து உள்ளனர்.
இதற்கிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழவே, தற்போதைய திமுக அரசு இந்த பல்கலைக்கழகத்தை முடக்க முயற்சி செய்வதாக அதிமுக குற்றம் சாட்டியது.
இந்நிலையில், விழுப்புரத்தில் அமையவுள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், "பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும்" குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CV Shanmugam CASE FILE HighCourt