தேர்தல் நடக்கும் முன்பே தோல்வியை அறிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல், வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மார்ச் மாதம் வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட அறிவிப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்து இருக்கும் கருத்து தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.

அவர் தெரிவித்த அந்த கருத்தில், "இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவா, பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்துவிடும். அதேசமயத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்தை நெட்டிசன்கள், 

"ஆக, நீங்களும் 2 மாநிலத்தில் தோல்வியடைய போறிங்க.,"

உலகத்துலயே தேர்தல் நடக்கும் முன்பாகவே, தோல்வியை ஒப்புக்கொண்ட முதல் கடசி கங்கிரஸ் காட்சியத்தான் இருக்கும்" என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS STATE LEADER SPEECH VIRAL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->