நிர்வாகிகளுக்கு தடை விதித்து உத்தரவுயிட்ட காங்கிரஸ்?! செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட தகவல்!
congress spokesman not participate in television debits
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி தனி பெருபான்மையுடன் இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்த் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சிகள் நடத்தும் விவாதங்களில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு பங்கேற்க தடை விதித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் தனது சுர்ஜிவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தொலைக்காட்சி சேனல் விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டு உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
congress spokesman not participate in television debits