முதலில் 2 திமுக அமைச்சர்கள்.. தற்போது காங்கிரஸ் எம்பி.. அதிர்ச்சியில் அரசியல் கட்சியினர்.!!
congress mp jayakumar corona positive
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் திரைப் பிரபலங்கள் என பலருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எனக்கு காரோண தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம். விரைவில் உடல் நலம் பெற்று உங்களையெல்லாம் தொகுதியில் சந்திக்கிறது என தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
English Summary
congress mp jayakumar corona positive