விஜய் பக்கம் செல்லும் காங்கிரஸ்!அதுதான் விஜய் இருக்காரே.. ஆப்ஷன் பி.. காங்கிரஸ் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. கடுப்பான திமுக! - Seithipunal
Seithipunal


2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி விவகாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக மீது கடும் அழுத்தம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகள், “காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கிறதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

முன்னதாக, காங்கிரஸுக்கு திமுகவையே ஒரே பெரிய ஆப்ஷனாகக் கருதும் நிலை இருந்தது. அதிமுக–பாஜக கூட்டணி இயங்கிக் கொண்டிருந்ததால், காங்கிரஸுக்கு மாற்றுச் சாத்தியக்கூறே இல்லை. ஆனால் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளதால், காங்கிரஸ் திமுகவிற்கு எதிராக பேச்சுவார்த்தையில் கூடுதல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கான அடையாளமாக ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பேசினார். அவரது சமூக வலைதளப் பதிவுகளிலும் விஜயை பாராட்டும் நடையை காட்டி வருகிறார். இது திமுகவிற்கு ஒரு தெளிவான அரசியல் செய்தியை வழங்கியிருக்கிறது — “நாங்கள் மாற்றுத் தேர்வுகளையும் பரிசீலிக்கிறோம்” என்பதை.

இதனுடன் இணைந்த இன்னொரு நடவடிக்கை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, 234 தொகுதிகளுக்குமான விருப்ப மனுக்களை உடனடியாக பெறத் தொடங்கியுள்ளார். திமுக–காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கி சில நாட்களிலேயே காங்கிரஸ் இதுபோன்ற செயலில் இறங்கியது, தனித்துப் போட்டியிடும் தயாரிப்பா அல்லது திமுக மீது அழுத்தமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் குழுவில் முக்கியமானது — ராகுல் காந்தியின் நெருங்கியவர் கிரிஷ் சோடங்கர் ஸ்டாலினுடன் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டது. இதில்தான் காங்கிரஸ் மூன்று பார்முலாக்களை முன்வைத்ததாக தகவல்:

 75 சட்டமன்ற தொகுதிகள்அல்லது  40 தொகுதிகள் + அமைச்சரவைப் பதவிகள்
அல்லது 30 தொகுதிகள் + 5 மாநிலங்களவை இடங்கள்இந்த மூன்று கோரிக்கைகளும் திமுக உயர்மட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

75 தொகுதிகள் வழங்குவது திமுக ஆதிக்கத்தையே பலவீனப்படுத்தும் என கருதப்படுகிறது.40 தொகுதிகள் + அமைச்சரவை பங்கீடு என்பது ஆட்சியில் பெரிய பங்கீட்டை காங்கிரஸுக்கு கொடுப்பதாகும்.மூன்றாவது விருப்பமாக 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களவை இடங்களையும் காங்கிரஸ் கோரியுள்ளது.

திமுக தரப்பில், இந்த மூன்று கோரிக்கைகளிலும் ஒருவித தயக்கமும் உள்ளது. அதிக தொகுதிகள் வழங்கப்பட்டால், தனித்து பெரும்பான்மையை உருவாக்குவது சிரமமாகி விடும் என்ற கவலை புலப்படும்.சேர்த்து பார்க்கும்போது,காங்கிரஸ் தற்போது திமுகவிடம் வலுவான பேச்சுவார்த்தை நிலையை உருவாக்கி விட்டது.அதே சமயம், தவெக இருக்கிற வரை காங்கிரஸின் பேச்சுவார்த்தை சக்தி இன்னும் அதிகரிக்கும்.

மொத்தத்தில்,2026 தேர்தல் கூட்டணி அரசியலில் திமுக–காங்கிரஸ் உறவு மிக நெருக்கடி கட்டத்தை எட்டியிருக்கிறது.
அடுத்த சில வாரங்களில் இந்த பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியலின் திசையையே தீர்மானிக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress is going to Vijay side That where Vijay is Option B Congress has taken the Brahmastra in its hands DMK is tough


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->