மாநிலங்​களவை தேர்தல்; மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு..! - Seithipunal
Seithipunal


மத்​திய பிரதேச மாநிலத்​தில் காலி​யாக உள்ள 03 மாநிலங்​களவை இடங்​களுக்கு தேர்​தல் அறிவிக்​கப்​பட்டுள்ளது. அதன்படி, இதில்  ஆளும் பாஜ 02 இடத்​தி​லும் காங்​கிரஸ் ஒரு இடத்திலும் எளி​தாக வெல்ல கூடிய சூழல் நிலவியது.

இந்த இடங்களில், பாஜ பொதுச் செய​லா​ளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்டிருந்​தனர். பாஜ​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 03வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார். 

இந்த சூழலில், காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தை பூர்​வீக​மாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில், நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்​பு மனு​வில் மீனாட்சி நடராஜன் குறிப்​பிடப்​ப​டாத​தால் அவரின் வேட்பு மனு நிராகரிக்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. 

இந்​நிலை​யில், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​களை காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, ''மீ​னாட்சி நடராஜன் மீது நீதி​மன்​றம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத நிலையில் அவரது மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. அவரது மனுவை ஏற்​கு​மாறு தேர்​தல் அதி​காரிக்கு உத்​தர​விட வேண்​டும்​'' என கோரிக்​கை மனு அளித்​தனர்​. 

இந்நிலையில், இந்த நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  அத்துடன், ''இது ஜனநாயக படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட சதி'' என்றும், தங்களது 62 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதால், 03-ஆம் இடத்திற்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress decides to file an urgent petition in the Supreme Court regarding the rejection of Meenakshi Natarajan nomination


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->