வரலாற்று வெற்றி : முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்த வாழ்த்துச்செய்தி.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  கடந்த 12ந்தேதி நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டது. 

இன்று தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டியில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

"சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது" என்று  பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார். மேலும், இந்திய அணிக்கு மத்திய அரசு ஒரு கோடி ருபாய் பரிசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin wish Team India beat Thomas Cup


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->