வைரலான வீடியோ! அதிமுக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பிய புகாரின் அடிப்படையில் அதிமுக நிகழ்வு நிர்வாகி சிடி ஆர் நிர்மல் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கடந்த வாரம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  

அந்த நேரத்தில், சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் தேங்கி மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு காணொளியை நிர்மல் குமார் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ஆனால், தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு இந்த காணொளி மியான்மர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், அது வியட்நாமைச் சேர்ந்ததாகவும் உறுதிப்படுத்தியது.  

இந்தத் தவறான தகவல் காரணமாக மின் கசிவு விவகாரம் தொடர்பாக பொய்யான செய்தி பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நிர்மல் குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Police Rumour ADMK Nirmal Kumar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->