சென்னை சிபிசிஐடி டிஐஜி வருண் குமார் உட்பட 03 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎஸ் அதிகாரிகளான வருண் குமார், விக்ரமன், ரகுபதி ஆகிய மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி-யில் டிஐஜியாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் ஈரோடுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு சிறப்பு அதிரடிப் படைக்கான ஐஜி பதவி காலியாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு டிஐஜியை நியமிக்கும் வகையில் அதன் அந்தஸ்தை குறைத்து அந்தப் பதவிக்கு வருண் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான வி.விக்ரம், டிஐஜியாக கட்டாய காத்திருப்புப் பட்டியலில் உள்ளார். இவர், தற்போது வருண் குமார் வகிக்கும் சென்னை சிபிசிஐடி-யின் டிஐஜி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொரு காவல் கண்காணிப்பாளராக கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள பி.ரகுபதி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணைக்கான துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai CBCID DIG Varun Kumar including 03 IPS officers transferred


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->