திமுக அமைச்சர் பொன்முடிக்கு நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
CBI Court DMK MInister Ponmudi
செம்மண் மணல் குறித்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், தமிழக அமைச்சர் பொன்முடி மார்ச் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில், விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
விசாரணையின் போது, விழுப்புரத்தில் செம்மண் வெட்டல் காரணமாக அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது.
இதையடுத்து, பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
English Summary
CBI Court DMK MInister Ponmudi