வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக மு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு வாபஸ்..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக மனு தக்க செய்யப்பட்டது. 

மு.க. ஸ்டாலின், தனது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்கு ரூ. 2.27 கோடிக்கு நிலம் வாங்கியதை மறைத்துள்ளதாக கூறி, விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில் இதுசம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில், வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்துக்கள் ஆகாது என்று குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு எதிராக சிவஞானசம்பந்தம், தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case against MK Stalin for concealing assets in nomination papers withdrawn


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->