கைதாகிறார் புஸ்ஸி ஆனந்த்! பெங்களூரை நெருங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


கரூரில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோருக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் மதியழகன் மற்றும் மத்திய நகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேசமயம் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், காவல்துறை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் என்ற அச்சத்தால், இருவரும் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் புஸ்சி ஆனந்த் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கரூர் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

மேலும், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சல்லடை போட்டு, குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bussy Anand Karur Stampede TVK vijay


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->