அசாமில் அபார வெற்றி; வரும் 12-ஆம் தேதி மீண்டும் பாஜக அரசு பதவியேற்பு..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த அ​சாம் சட்டமன்ற தேர்​தலில் பாஜ தலைமையிலான தேஜ கூட்​ட​ணி, மொத்​தமுள்ள 126-இல் 102 இடங்களில் அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன் காரணமாக 03-வது முறை​யாக ஆட்​சியை தக்கவைத்துள்ளது. இதனிடையே, அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​ய பார்​வை​யாளர்​களாக ஒன்றிய அமைச்​சர் ஜே.பி. நட்டா, அரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்​ளனர். 

அதன் அடிப்படையில், இன்னும் ஓரிரு நாளில் பாஜ​வின் மத்​தி​ய பார்வை​யாளர்​கள் கவுகாத்திக்கு வரு​வார்​கள் என்​றும், அதன் பிறகு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்எல்ஏக்​கள் அடுத்த முதல்​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள் என்​றும் தகவல்​கள் தெரிவிக்கின்​றன.

ஆனால், மீண்டும் ஹிமந்த பிஸ்வா சர்​மாவே முதல்​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ள​தாக மாநில பாஜ வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. அந்தவகையில், புதிய அரசு பதவி​யேற்பு விழா வரும் 12-ஆம் தேதி நடை​பெறவுள்​ளது. 

இந்​நிலை​யில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜி​னாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்த்நிலையில், புதிய முதல்​வர் மற்​றும் அமைச்​சரவை நியமிக்கப்படும் வரை தற்​காலிக​மாக பதவி​யில் தொடருமாறு ஆளுநர் கேட்டு கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Government to take office again in Assam on the 12th


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->