#BREAKING: பாபர் மசூதி இடிப்பு வழக்கு! சற்றுமுன் தீர்ப்பு நாள் அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதியானது கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக.,வின்  மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக. 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி இருந்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ. தினசரி விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பாஜக.,வின் மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செப்.30-ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.



இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

babri masjid breake case judgment date


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->