அதிமுகவில் திடீர் திருப்பம்.. ஓபிஎஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி (நாளை) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. 

தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக நேற்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தாமரை ராஜேந்திரன்  ஆதரவு தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ariyalur admk member support edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->