நீ தமிழச்சியா?...நடிகை கஸ்தூரி மீது பரபரப்பு புகார் அளித்த வீரலட்சுமி! - Seithipunal
Seithipunal


வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும், தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக இரு சமூகங்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி பேசி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், உரிமைகளுக்காக போராடாத நீ தமிழச்சியா என்று வினவினார். .

சீமான் அண்ணன் தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதற்காக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சீமான் கருத்து போல் தான் நடிகை கஸ்தூரியும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும், பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you a tamilachi veralakshmi filed a sensational complaint against actress kasthuri


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->