அண்ணாமலை கருத்துக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விளக்கம்! - Seithipunal
Seithipunal


"மும்பை மகாராஷ்டிராவிற்கு மட்டுமானது அல்ல; அது ஒரு சர்வதேச நகரம்" என அண்ணாமலை பேசியது மராட்டியத் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ் தாக்கரே (MNS): "தமிழ்நாட்டிலிருந்து வந்த உனக்கும் இந்த மண்ணிற்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களைத் தொடர்ந்து இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகப் பேசுகிறீர்களா?" என ஆவேசமாகச் சாடினார்.

ஆதித்ய தாக்கரே (Shiv Sena UBT): "தேர்தலில் டெபாசிட் இழந்தவர் அடுத்த பிரதமரைப் போலப் பேசுகிறார். அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டனர்," என்று விமர்சித்தார்.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விளக்கம்: சர்ச்சை வலுத்த நிலையில், "அண்ணாமலைக்கு இந்தி சரியாகத் தெரியாது, அவர் தேசியத் தலைவரும் அல்ல. அவரது கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டாம்," எனக் கூறிச் சூழலைத் தணிக்க முயன்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalais Mumbai Remarks Spark Controversy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->