மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழும் எம்ஜிஆர்.!! - அண்ணாமலை புகழாரம்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆர் வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் பொதுமக்களாலும், அதிமுகவினராலும் கொண்டாடப்பட்ட வருகிறது.

எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினார். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ''தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா அமரர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்த நாள் தினம் இன்று.

ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தியவர். மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Pride MGR on his birth anniversary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->