ஆஜராகாத அதிமுக முன்னாள் அமைச்சர்.. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு.!!
AIADMK exminister adjournd asset accumulation case absent
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள் ஆஜராகவில்லை. இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
English Summary
AIADMK exminister adjournd asset accumulation case absent