அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? பட்டியலில் இடம்பெற்ற ஈபிஸ் மனு!
AIADMK EPS vs OPS case SC 28012023
நேற்று, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் பழனிச்சாமியின் கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
அப்போது, இந்த கோரிக்கையை ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தெரிவித்து விட்டீர்களா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்க்கு தகவல்கள் பகிர்ந்து கொண்டதாக பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்படி என்றால் திங்கள் கிழமை இந்த கோரிக்கையை மீண்டும் முறையிட அறிவுறுத்திய நீதிபதிகள், தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசினை செய்வதாக தெரிவித்தனர்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அதற்க்கு பிப்.7 ஆம் தேதி கடைசி நாள் என்றும், பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பால், முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதுகுறித்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வரும் பிப்.7க்கு முன் தீர்ப்பு வழங்கினால் சரியாக இருக்குமா? (அல்லது) இடையீட்டு மனுவை விசாரிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்த முறையீடு மனு, பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
AIADMK EPS vs OPS case SC 28012023