#BigBreaking | பொதுக்குழு வழக்கில் சரண்டர் ஆன ஓபிஎஸ் - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. 

இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து பழனிச்சாமி செய்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கின் விசாரணை என்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதி அளித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த வழங்கி விரைந்து விசாரணை செய்யவேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்சியின் அடிப்படை விதிகளில் கொண்டு வந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் உள்ளது. எனவே இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையத்துக்கு நீங்கள் நோட்டீஸ் அளித்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி, தேர்தல் ஆணைய நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க மனு தாக்கல் செய்யவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு விசாரணையின்போது, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க அனைவரும் தயாராக இருந்தால், விசாரணை நடத்த நாங்களும் தயார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS SC Case OPS side 61222


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->