#BigBreaking | உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - நாள் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி, அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. 

இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு குறித்து பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21 ஆம் தேதி நடக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று, வரும் 30ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கை டிசம்பர் 11ல் விசாரிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. மேலும், இந்த வழக்கு டிசம்பர் 6ம் தேதியே விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுக்ள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK OPS vs EPS SC Case Issue Chennai Tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->