#BigBreaking | ஓபிஎஸ்-க்கு தடை? உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி!
ADMK OPS vs EPS SC Case 9122022
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக கடந்த 6 ஆம் தேதி விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதி அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த வழங்கி விரைந்து விசாரணை செய்யவேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்சியின் அடிப்படை விதிகளில் கொண்டு வந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் உள்ளது. எனவே இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையத்துக்கு நீங்கள் நோட்டீஸ் அளித்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி, தேர்தல் ஆணைய நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க மனு தாக்கல் செய்யவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், அதிமுக சின்னம், கட்சி ஆகியவற்றுக்கு உரிமை கோரி, தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்க வேண்டும் என்று, உச்சநீதிமண்டத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், "நிலுவையில் உள்ள வழக்குகளைக் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ். கூறுவது சட்டப்படி ஏற்புடையது அல்ல. யாரையும் செயல்படாமல் ஓ.பி.எஸ் தடுத்து வருகிறார்" என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
English Summary
ADMK OPS vs EPS SC Case 9122022