சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டிய ஓபிஎஸ்.. அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலா மற்றும் டி டி தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றிய தலைமைக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனிடையே இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ அருள்மொழி தேவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எனவே சசிகலா அதிமுக உறுப்பினரே கிடையாது. 90 சதவீத அதிமுகவினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனக் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பது தொண்டர்களின் எண்ணம். பெரியகுளத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேவையற்ற ஒன்று. இந்த தீர்மானம் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk mla press meet about sasikala and ttv dinakaran


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->