கட்டப்பஞ்சாயத்து நடத்த தான் மக்கள் உங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினார்களா? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


காதல் திருமணத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து ஒரு சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், கேவி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்திக்கு எதிராக புகார் எழுந்தது. இதனைக் கொண்டே, அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த இரு நாட்களாக தீவிரமாக தேடுதல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், முன் ஜாமீனுக்காக அவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக ஜெகன் மூர்த்தி நேரில் ஆஜரானார். இதையடுத்து, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது.

விசாரணையின் போது, நீதிபதி வேல்முருகன், "சட்டவிரோதமான கட்டப்பஞ்சாயத்து நடத்த, மக்கள் உங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினார்களா?" என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

வழக்கு குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் முடிவை பரபரப்புடன் கணிக்கத் தொடங்கியிருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MLA Jaganmoorthy Chennai High court 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->