நீடிக்கும் குழப்பம்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே ஓ.பி,எஸ்-ஐ தலைமை ஏற்க வா என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தற்போது இபிஎஸ் ஆதரவாளர்களும் தலைமை ஏற்க வா தலைவா என போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். பொதுக்குழு, செயற்குழு தீர்மானம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஜெயக்குமார், செம்மலை, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வைகை செல்வன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk members meeting for chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->