அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி : வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டரீதியாகவும், கட்சியின் ஆதரவோடும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி இருக்கிறது.

அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு, கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு உயர்நீதிமன்ற இறுதி தீர்ப்பில், தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதும் தலைமை அலுவலகம் உள்ளிட்ட சில வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு பச்சை கொடி காட்டியது நீதிமன்றம்.

நடைபெற்ற பொதுகுழு கூட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி, வருகின்ற அக்டோபர் முதல் வாரத்திலேயே இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Secretary Election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->