அதிமுக பொதுசெயலாளர் வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா பொது செயலாளராக ஆக்கப்பட்டார். பொதுக்குழு கூடி சசிகலாவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டாக தேர்வு செய்தனர். அவர் சிறையில் சென்ற பிறகு சசிகலாவை கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமர்ந்தனர்.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொது செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்த கோரி, தேர்தல் ஆணையத்திற்கும், தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கும் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர் நல்ல பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கலைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்த பதவிகளுக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உட்கட்சி தேர்தல் நிர்வாகத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால், மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிட முடியாது எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk general secretary case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->