கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகள்.. கண்ணீர் சிந்தாத கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள்.. இபிஎஸ் கொந்தளிப்பு!
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Kallakurichi incident
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இன்றைய ஆட்சியாளர்களைத் தவிர.
மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சராக இருக்கிறார்!
முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?
ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என என்று அடுத்த வேளை கமிஷன் கொள்ளையையும், விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin Kallakurichi incident