தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் தெளிவாக இருக்கிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
ADMK BJP Nainar Nagendran DMK alliance
சர்வதேச யோகா தினத்தையொட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாளையங்கோட்டையில் யோகாசனத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, "முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்து முன்னணி நடாத்தும் மாநாட்டில் பாஜகவினரும் பங்கேற்கின்றோம். பக்தி உணர்வுடன் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு தடை முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு எந்த திட்டத்தையும் மறைக்கவில்லை. ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களில், மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டமாக மாற்றிக்கொள்கிறது. மத்திய திட்டங்களை தமிழாக்கம் செய்து அரசியல் செய்து வருகின்றனர்.
தமிழ் என்பது பழமையான மொழி என்பதை பிரதமர் மோடியே உலகிற்கு எடுத்துச் செல்கிறார். ஆனால் தமிழக அரசு கீழடி குறித்து மட்டுமே பேசுகிறது. ஐ.நா. வரை சென்றாலும் அதையே வலியுறுத்துகிறது.
தி.மு.க. கூட்டணியில் சரளமாக ஏதும் நடக்கவில்லை. திருமாவளவன் ‘கூட்டணியில் தொடர்வோம்’ என்கிறார். ஆனால் “தொடர்வதற்கேனும் 2 இடங்கள் கிடைக்குமா?” என்ற சந்தேகம் இருக்கிறது. இது கூட்டணிக்குள் குழப்பம் நிலவுவதை காட்டுகிறது.
முன்னதாக 12 லட்சம் மனுக்களைத் தீர்த்ததாக அரசு கூறினாலும், எந்த பயனும் தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. பாஜக வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு பயனளித்ததை விளக்கியே வாக்கு கேட்க வேண்டும், எதிர்க்கட்சி குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல எனவும் அவர் கூறினார்.
English Summary
ADMK BJP Nainar Nagendran DMK alliance