அண்ணாமலையின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.. அதிமுக அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம்.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உங்களுடைய கருத்து தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என கூறினார். அதனைத் தொடர்ந்து மதுரை சேர்ந்த கட்சி நிர்வாகியும் நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

 அதே நேரத்தில் ஏராளமான நிர்வாகிகள் அண்ணாமலையையும் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இங்கு பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக அமைப்பை செயலாளர் ஆதி ராஜாராம் பேசியதாவது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்ற அண்ணமலையின் கருத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Aadhi Rajaram speech about BJP Annamalai alliance decision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->