டெல்லியில் வெள்ளத்துக்கு காரணம் இவர்கள் தான்! சமயம் பார்த்து அடிக்கும் பாஜக!
Aam Aadmi govt is responsible for floods in Delhi BJP alleges
டெல்லி வெள்ளத்துக்கு ஆம் ஆத்மி அரசின் ஊழலும், பொறுப்பற்றத் தனமும் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி உள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் டெல்லியில் பல முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், யமுனை நதி, கால்வாய்களில் தூர்வாரும் பணியை டெல்லி அரசு சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லியின் பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா யமுனை நதி மற்றும் டெல்லியின் கால்வாய்களை தூர்வாரும் பணியினை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சரிவர செய்யவில்லை. ஆம் ஆத்மி அரசே டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம்.
யமுனை நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரியது குறித்து ஆம் ஆத்மி அரசு மீது விசாரணை நடத்த வேண்டும். டெல்லி வெள்ளத்துக்கு ஆம் ஆத்மி அரசின் ஊழலும், பொறுப்பற்றத் தனமும் தான் காரணம். கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Aam Aadmi govt is responsible for floods in Delhi BJP alleges