ஆதார் எடுத்து 10 வருஷம் ஆகிடுச்சா? அப்ப உடனே இதை செய்துவிடுங்கள் - மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆதார் அட்டை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று, ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களின் முக்கிய சான்றாக இருக்கும் ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக இந்த கட்டாய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும். தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, தங்களது அடையாள சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் சமர்ப்பித்து, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மை ஆதார் இணையதளம் அல்லது மை ஆதார் செயலி மூலம் இதனை செய்து கொள்ளலாம். மேலும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் இதனை சித்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் பெயரில் உள்ள பிழைகள், புகைப்படங்களை பதிவேற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட விவரங்களையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhar Update 2022 announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->