அதிரடி! 4 ம் கட்ட கல்வி விழா...நாளைக்கான ஏற்பாடுகள் பயங்கரம்...!
4th phase education festival Preparations for tomorrow are intense
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 'விஜய்', இந்தாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்வி ஆர்வத்தை புகட்டும் வகையில் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.மேலும், 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ-மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியிலுள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
மேலும், நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
English Summary
4th phase education festival Preparations for tomorrow are intense