உணவை மதித்து உணவு உண்ணும் போது கடைபிடிக்க வேண்டியவை என்ன? - Seithipunal
Seithipunal


உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியவை:

  • சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக்கூடாது.
  • இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
  • அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.

  • உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
  • காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
  • பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
  • உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
  • சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
  • இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டே சாப்பிடக்கூடாது.
  • காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
  • சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
  • தொலைக்காட்சியைப் பார்த்தபடியும் உணவினை சாப்பிடக்கூடாது.
  • ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

the things to observe while eating food with respect


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->