பொண்ணு பாக்க போற இடத்தில இப்படி எல்லாம் செஞ்சா, கண்டிப்பா பொண்ணு உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பெண் தேடுவது என்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. அதுவும் சிலர் வீடு, வாசல், வாகனம் என செட்டில் ஆன பின்னர் தான் பெண் பார்க்க வேண்டும் என்று இளமையை இழந்த பின்பு பெண் பார்க்கச் செல்வார்கள். அந்த வகையில் தற்போது அனைத்தும் சரியாக அமைந்தாலும், பெண்ணிற்கோ அல்லது பெண் வீட்டில் இருபவருக்கோ உங்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று பிடிக்காமல் போய் வேண்டாம் என மறுப்பார்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில் எப்படி பெண் பார்க்க செல்லும் இடத்தில் நடந்து கொள்ள வேண்டும்.? எப்படி நடந்து கொண்டால் பெண்ணிற்கும், பெண்ணின் பெற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

சரியான நேரம்: 

பெண் பார்க்க செல்லும் சமயத்தில் குறித்த நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும். அதற்கு முன்பாக செல்வது வேலையை முடிக்கும் முன்பே நீங்கள் சென்று சங்கடப்படுத்தும் விதமாக ஆகி விடும். அல்லது தாமதமாக வரும் பட்சத்தில் பெண் வீட்டினர் பதட்டப்பட ஆரம்பித்துவிடுவார்கள். வருவார்களா? வர மாட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என பெண் வீட்டினருக்கு அச்சுறுத்தும் செயலாக அது அமையும்.

அதனால் நீங்கள் பெண் பார்க்க செல்லும் இடத்திற்கும், உங்கள் வீட்டுக்குமான தூரத்தை கணக்கிட்டு போக்குவரத்து நெரிசலையும் கணக்கிட்டு பத்து நிமிடம் முன், பின்னாக செல்வது சிறந்தது.

pen parkkum padalam, seithipunal

உடை:

ஆள் பாதி, ஆடை பாதி என கூறுவார்கள். நாம் உடுத்தும் உடைக்கு என்று தனி மதிப்பு ஒன்று இருக்கின்றது. நம்மை கம்பீரமாகவும், அழகாகவும் காட்டும் சக்தி நாம் உடுத்தும் உடைக்கு மட்டும் தான் இருக்கின்றது. எனவே நாம் உடுத்தும் உடையை சரியாக தேர்வு செய்து அணிவது பெண் பார்க்கும் விஷயத்தில் மிக மிக முக்கியமானதாகும்.

மரியாதை:

உங்களுடைய தாய், தந்தை மற்றும் உடன் இருக்கும் நண்பர்கள் என உங்களது வீட்டில் அவர்களை எப்படி வேண்டுமானாலும் பேசி இருக்கலாம். ஆனால், பெண் பார்க்கும் இடத்தில் அவர்களுக்கு மரியாதையை கொடுப்பது மிக முக்கியமானதாகும். ஏனென்றால், நீங்கள் மதிப்பு மரியாதையுடன் நடக்கும் பட்சத்தில் பெண்ணின் பெற்றோர்களுக்கு உங்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும்.

சாப்பாடு:

சிற்றுண்டி சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது, "கிடைத்தது வாய்ப்பு" என கண்டதையும் அள்ளி வாயில் போட்டு கொமுக்காமல் அனைவரும் சாப்பிட ஆரம்பித்த பின்னர் சிறிது எடுத்து கொறித்து விட்டு, காபி மட்டும் அருந்தலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களும், அவ்வாறே செய்வது நல்லது. இது உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் பெண் வீட்டினருக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

பெண்ணை பார்க்கும் பொழுது:

"பெண்ணை வர சொல்லுங்கப்பா." என உங்களுக்கு ஒரு சிக்னல் கிடைக்கும் போதே அலெர்ட் ஆகி தூரத்தில் வரும்போதே, பெண்ணை பார்த்து விடுங்கள். அவர் காபி கப்பை அருகில் எடுத்து வரும் பொழுது, அவரை உற்றுப் பார்ப்பது, முறைத்து பார்ப்பது போல தோன்றும்.

pen paarkkum padalam, seithipunal

அத்தோடு உங்களுடைய பார்வையானது அருகில் இருந்து பார்க்கும் பொழுது பெண்ணிற்கு பயத்தை ஏற்படுத்தும். அதனால் பெண் தூரத்தில் வரும் பொழுது அல்லது அருகில் இருப்பவர்களுக்கு காபி கொடுக்கும் போது பார்ப்பது தான் நல்லது. உங்கள் முகத்திற்கு நேரே வரும் பொழுது அவரை முறைத்துப் பார்ப்பது முறை அல்ல.

தனியாக பேசுவது: 

அப்படி ஒரு வாய்ப்பு இன்னமும் பல வீடுகளில் மறுக்கப்பட்டு தான் வருகின்றது. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு வேண்டும் என்றால், இதை உங்கள் வீட்டிலேயே நீங்கள் பேசி வைத்துக் கொண்டு வருவது நல்லது. உங்களது தாய், தந்தை அல்லது நம்பிக்கையான குடும்ப நண்பர் ஒருவரிடம் கூறி, "நம்மலே பேசிக்கிட்டிருந்தா எப்படிப்பா.? அவங்க கொஞ்ச நேரம் தனியாக பேசட்டும் ." என கூற வையுங்கள்.

அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள் ஸ்மார்ட்டாக செய்கிறேன் என எதையும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். அதுபோல தனியாக பேசும் இடத்தில் பெண்ணிடம் நான் இப்படித்தான், நான் அப்படித்தான் என மொக்கை ஜோக்குகளை அடித்து இம்ப்ரஸ் செய்ய நினைக்காதீர்கள்.

அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதை தான் அவரும் விரும்புவார். உங்களுக்கும் நல்லது. அதனால் அவரை பேச வைத்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

வரதட்சணை, seithipunal

வரதட்சனை: 

தப்பி தவறியும் நீங்களோ, உங்கள் வீட்டினரோ வாய் திறந்து வரதட்சணை குறித்து பேசக்கூடாது. பெண் வீட்டினர் கேட்கும் பட்சத்தில் முதலில் மறுத்து விட்டு அதன் பின்னர், பெண்ணின் விருப்பப்படி என்ன வேண்டுமோ செய்யுங்கள் என கூறுவது தான் சிறந்தது. ஏனென்றால் பெண் கொண்டுவரும் நகையோ, பொருளோ அது அந்த பெண்ணை சார்ந்த விஷயம் மட்டுமே. இவ்வாறு நடந்து கொள்வது தான் மிகவும் நேர்மையாக இருக்கும்.

இப்படி நீங்கள் கூறும் பட்சத்தில், பெற்றோர் மறுத்தாலும் அந்த பெண் உங்களை தான் மணந்து கொள்வேன் என பிடிவாதம் செய்யவும் வாய்ப்பு இருக்கின்றது. 

இப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் பெண்ணும், பெண் வீட்டினரும் உங்கள் மீது நன்மதிப்பை கொண்டிருப்பர். அதனால் கண்ணியத்துடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pen paarkkum function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->