பிரியாணியில் போடப்படும்.. ஜாதிக்காய் இப்படி பட்டதா.?! தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


ஜாதிக்காயானது மரத்தின் விதையில் இருந்து வருகிறது   உலகின் ஜாதிக்காய் உற்பத்தியில்  இந்தோனேசியா  முக்கிய பங்கு வகிக்கிறது. உலகிலேயே இந்தோனேஷியா தான் அதிகமாக ஜாதிக்காய் உற்பத்தி செய்யும் நாடாகும்.

ஜாதிக்காயானது உலகம் முழுவதும்  இனிப்பு மற்றும் காரமான உணவுகளில்  மசாலாவாக பயன்படுத்தப்படுகிறது.

ஜாதிக்காய் உணவிற்கு சுவையை  அதிகப்படுத்துவதில் மட்டுமல்வாமல் அதில் ஏராளமான  உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களும் உள்ளன. ஆனால், நாம்  ஜாதிக்காயை  குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அது குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தும் போது  மனிதனை தன்னிலை மறக்கச் செய்து  ரணம் வரை இழுத்துச் செல்லும்  நச்சுத்தன்மையும் கொண்டது.

நமது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய  ஏராளமான ஆன்ட்டி ஆக்சிடென்ட்  காம்பவுண்டுகள் இதில் நிறைந்துள்ளன. இவை நமது  உடலில் உள்ள செல்கள்  பாதிப்படைவதில் இருந்து  நம்மை பாதுகாக்கின்றது. இதனால்  நம் உடலை கேன்சர் நோய் தாக்காமல் தடுக்கிறது.

ஜாதிக்காயில் பினாலிக் கலவைகள்  நம் உடலுக்கு பயன் தரக்கூடிய  அத்தியாவசியமான எண்ணைகள்  மற்றும் ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் செல்களின் சேதத்தை கட்டுப்படுத்துவதோடு  நாள்பட்ட நோயிலிருந்தும் உடலை பாதுகாக்கிறது.

ஜாதிக்காயானது  சில அழற்சி நொதிகளைத் தடுப்பதன் மூலம்  நம் உடலில் இருக்கும் ஏற்படும் வீக்கங்களை குறைய பயன்படுகிறது. 

ஈ.கோலி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ், மியூட்டன்ஸ் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக ஜாதிக்காய் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக  சோதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jathikai special Benefits in Tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->