சாப்பிடும் போது இதை செய்தால் அவ்வளவு தான்..!
don't do this while eating
என்ன சாப்பிடவேண்டும்., எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விட எப்படி சாப்பிடக்கூடாது என்பதுதான் இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சாப்பிடும் போது கவனம் முழு வதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். டீவி, செல்ஃபோன் போன்றவை நிச்சயம் கூடாது. இதனால் அளவுக்கு அதிகமான உணவு எடுக்க வாய்ப்புண்டு.
சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வார்கள் பெரியவர்கள். காரண காரியங்களின்றி அவர்கள் சொல்லவில்லை. சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் .
இதுவும் ஆரோக்யமானதல்ல என்பதால் பேசாமல் இயன்றவரை வாயை திறக்காமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் சில நாட்களிலேயே உடல் ஆரோக்யமடைவதை கண்கூடாக உணரலாம்.
மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், உளைச்சல் என எதையும் அசைபோடாமல் உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறுவயது வரை வாழ்கிறோமோ இல்லையோ ஆரோக்யத்தோடு வாழலாம்.
English Summary
don't do this while eating