கோடையில் சரும எரிச்சலா.. அப்போ இதனை பயன்படுத்துங்கள்..!
Summer Skin Care tip
கோடைக்காலத்தில் சரும பராமரிப்பிற்கு அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும். அதற்காக வாழைப்பழத்தை பயன்படுத்தலாம். வாழைப்பழம் சருமத்திற்கு மென்மையை அளிக்கும்.எப்படி பயன்படுத்துவது என பார்போம்.
வாழைபழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். அதனை நேரடியாக முகத்தில் தடவவும். (கண்களில் படாமல் பார்த்து கொள்ளவும்). 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவும்.
வாழைபழத்தில் காய்ச்சாத பால் 2 டேபிள் சேர்த்து நன்கு கலந்து கருமைபடிந்த இடங்களில் தடவி வரவும். இதன் மூலம் கருமை நீங்கி பொலிவு பெறும்.
பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு அதனுடன் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையம் நீங்கி மென்மையான பொலிவான சருமம் கிடைக்கும்.