கூந்தலுக்கும் சருமத்திற்கும் பயன்படும் பப்பாளி.. எப்படி பயன்படுத்துவது..!
Pappaya For Skin and Hair care
அனைவருக்கும் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விரும்புவோம். இயற்கையாக கிடைக்கும் பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு உதவும். இன்று பப்பாளியை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என பார்போம்.
பப்பாளொ துண்டுகளை மசித்து கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து அதனை சருமத்தில் தடவி கொள்ளவும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வர முகம் பொலிவு பெறும்.பப்பாளி பழத்துடன் தேன் மற்றும் பால் கலந்து அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி வர கரும்புள்ளிகள் மறைந்து பொலிவு பெறும்.
பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி வர முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச்சென மாறும்.
பப்பாளி, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கூந்தலில் மாஸ்க் போட்டு கூந்தலை அலசி வர கூந்தல் மென்மையாகும்.
English Summary
Pappaya For Skin and Hair care