மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் ஏற்படும் அரிப்பு - வலிகளுக்கு காரணம் என்ன?..! தவிர்ப்பது எப்படி?..!!
how to solve breast and breast nipple itching problem
பெண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கு பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். இதற்கு இப்போதுள்ள சூழ்நிலையில் பல விதமான காரணங்கள் கூறலாம். பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையில் அவதிப்படும் பிரச்சனையாக மார்பக காம்புகளில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை உள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உடலிலும் ஏற்படும் ஹார்மோன்கள் மற்றம்., மார்பகங்களின் அளவு என்று ஒவ்வொன்றும் பெண்களின் அழகை அதிகரித்துக்கொண்டே செல்லும். பெண்களின் மார்பகத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையால் பொது இடங்களில் சில சமயம் சில தர்ம சங்கட நிகழ்விற்கும் உள்ளாக நேரிடும். மார்பகத்தில் ஏற்படும் அரிப்பிற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து இனி காண்போம்.
நமது சுற்றுப்புற சூழ்நிலையின் வறட்சி காரணமாக (குளிர்காலத்தில்) உதடுகள் மற்றும் சருமம் அதிகளவு வறட்சிக்கு உள்ளாகுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் உதடு மற்றும் பாதத்தில் வெடிப்புகள் கூட ஏற்பட்டு இருக்கும். இதனைப்போன்று மார்பகத்தில் ஏற்படும் பிரச்சனையும்., மார்பக காம்பு பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாது மார்பகத்தில் தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு பயன்படுத்துதல்., குளிக்கும் சமயத்தில் 10 நிமிடத்திற்கு மிகாமல் குளித்தல் மற்றும் வீடுகளில் குளிர்பதன சாதனம் வைத்திருப்பவர்கள்., குளிர்பதன சாதனத்தை உபயோகம் செய்தல் போன்றவை செய்யலாம். நமது சருமத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்தி., நீண்ட நேரம் சோப்பை வெளியேற்றாமல் இருந்தால் அது அரிப்பிற்குள்ளாகுவது போலவே., மார்பகத்திலும் அரிப்பை ஏற்படுத்துகிறது.
பெண்களின் தந்தை மற்றும் தாயார் அதாவது பரம்பரை வழியில் உள்ள நபர்களுக்கு எக்சிமோ எனப்படும் மார்பக காம்புகளில் அரிப்பு மற்றும் வெடிப்புகளின் காரணமாக நீர்மம் சுரக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வெடிப்புகள் அதிகமாக இருந்து., திரவமும் அதிகளவு இருக்கும் பட்சத்தில் மருத்துவரை கட்டாயம் நாடுவது நல்லது. மார்பக காம்புகளின் வெடிப்புகளில் இருந்து வெளியேறும் திரவம் தோலின் மீது வினைபுரிந்து அலர்ஜியை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. சோப்பில் இருக்கும் வேதி பொருட்களின் காரணமாக தோல் அலர்ஜியும் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாடிக்கையாக உபயோகம் செய்யும் சோப் மற்றும் ஷாம்புகளை மாற்றிய பின்னர் மார்பக காம்புகளில் மற்றும் மார்புகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தால்., புதிய வகையான சோப்பை நிறுத்திவிடவும்.
பெண்கள் உபயோகம் செய்யும் உள்ளாடையான பிரா (மார்பக கச்சை) புதியதாக இருந்தாலும் சுத்தமானது போல தோற்றமளிக்கும். பெரும்பாலான தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் உள்ளாடைகளில் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு., விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் சில நேரம் அழுக்குகள் மற்றும் தூசிகள் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் புதியதாக வாங்கும் உள்ளாடையான மார்பக கச்சை மற்றும் ஜட்டி (இடுப்புகளுக்கு கீழ் அணியும் இடுப்பு கீழ் ஆடை) போன்றவற்றை துவைக்காமல் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக தொற்றுகளில் இருந்து தப்பிக்கவும் நமக்கு உதவியாக அமைகிறது.
இதற்கு அடுத்தபடியாக மார்பக காம்புகளில் அரிப்புகள் ஏற்படுவதற்கு இறுக்கமான மார்பக கச்சை (பிரா) காரணமாகவும் அமைகிறது. மார்பக காம்புகள் இயற்கையாகவே மென்மையாக இருக்குமாறும்., அதிகளவு உணர்ச்சி கொண்ட பகுதியாகவும் அமையப்பெற்றது. இதனால் மார்பகத்தின் அளவிற்கு ஏற்றார் போல மார்பக கச்சையை அணியாமல் இறுக்கமான கச்சையை அணிந்தால் அரிப்புகள் ஏற்படும். இவ்வாறு அரிப்புகள் ஏற்பட்டு., அசவ்கரியத்தை உணரும் பட்சத்தில் உடனடியாக ஏற்ற அளவிற்கான உள்ளாடையை தேர்வு செய்வது நல்லது. இதுமட்டுமல்லாது கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியான பல மாற்றங்களை சந்திக்கும் சமயத்தில் சோர்வு., கால்களில் வீக்கம் மற்றும் மார்பக காம்புகளின் அரிப்பானது இயல்பான ஒன்றாகும். இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்.
குழந்தையை பெற்றெடுத்த தாய் தனது குழந்தைக்கு பால் கொடுப்பது காட்சிக்காக வேண்டுமென்றால் எளிதாக இருக்கலாம். குழந்தைகள் தாயிடம் தாய்ப்பால் பருகும் சமயத்தில்., சில நேரம் கூறிய புதிய பற்களால் எதிர்பாராமல் கடித்துவிட்டால்., உணர்ச்சி அதிகமாக உள்ள மார்பக காம்புகளின் பகுதிகளில் அதிகளவு வலி மற்றும் அரிப்புகள் ஏற்படும். இதனால் சில சமயம் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டு இருப்பின் மருத்துவரை சந்தித்து ஆலோசித்துக்கொள்வது நல்லது. இதுமட்டுமல்லாது திரஸ் என்ற பூஞ்சை தொற்றுக்கும் ஆளாக அதிகளவு வாய்ப்புள்ளது. இந்த தொற்றானது ஈரப்பதம் உள்ள இடத்தை தாக்கும்.
நாக்குகளில் இந்த பூஞ்சையின் பாதிப்பு அதிகளவில் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயம் சாதாரணமாக ஏற்படுவதற்கு நமது சுற்றுப்புற சூழ்நிலையின் சுகாதாரமும் ஒரு காரணமாக உள்ளது. பெண்களின் மார்பக காம்புகளை சுற்றிலும் வெண்மையான படலம் மற்றும் மார்பக காம்புகளை தொடும் சமயத்தில் அதிகளவு வலி மற்றும் சாதாரணமாகவே அரிப்பு போன்றவை ஏற்பட்டால் பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைக்கு மருத்துவரை சந்தித்து., தேவையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் இறுதி காலம் அதிகளவு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த சமயத்தில்., சருமத்தில் ஏற்படும் வறட்சியின் காரணமாக அரிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் உடல் வெப்பத்துடன் இருந்து., மார்பகத்தின் காம்புகளில் கடுமையான அரிப்பு ஏற்பட்டால் மாதவிடாய் இறுதி காலத்தை நெருங்குவது ஏறக்குறைய உறுதியாகும். மேலும்., மார்பக காம்புகள் எந்த சமயத்திலும் அரிப்புடனும் - மார்பக காம்புகள் மற்றும் மார்பகத்தில் கட்டிகள் இருப்பதாக உணர்வு ஏற்பட்டால் மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்க வாய்ப்புள்ளது. இது குறித்த சந்தேகத்தை தீர்க்கவும்., ஆரம்ப கட்டத்தில் மார்பக புற்றுநோய் இருந்தாலும் மருத்துவரை ஆலோசித்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவது நல்லது.
English Summary
how to solve breast and breast nipple itching problem