காலை உணவாக இதனை செய்து கொடுங்கள்..பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் அவல் ரெசிபி..!
Aval Kichady
காலை உணவாக சத்தான உணவை எடுக்க வேண்டியது அவசியாகிறது. அதற்காக சிகப்பு அவலை வைத்து சுவையான கிச்சடி எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
கெட்டி சிவப்பு அவல் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க : காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும். நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். அவலை தேங்காய் கழுவி கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அதனுடன் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை தூவி கிளறி இறக்கினால் சுவையான அவல் கிச்சடி தயார்.