வேலைக் கிடைக்காததால் மன உளைச்சல் - வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டம் கன்னூஜ் பகுதியை சேர்ந்தவர் பிரஜிஸ்பால். கல்லூரி படிப்பை முடித்த இவர் சமீபத்தில் நடந்த காவலர் தேர்விலும் பங்கேற்று தோல்வியை சந்தித்தார்.

இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த பிரஜிஸ்பால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையோ செய்தனர்.

அந்த சோதனையில் பிரஜிஸ்பால் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவர், வேலை கிடைக்கவில்லையென்றால் ஒருவர் டிகிரி வாங்கி என்ன நன்மை. 

என் வாழ்நாளில் பாதியை நான் படிப்பில் செலவழித்துவிட்டேன். வேலை கிடைக்காததால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை' என்றுத் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரஜிஸ்பால் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth sucide in uttar pradesh for job


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->