கர்நாடகா: அறிவாளால் வெட்டி வாலிபர் கொலை.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வாலிபரை அறிவாளால் வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள நேக்கார் நகரில் நேற்று மதியம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து பழைய உப்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் யாரோ அந்த வாலிபரை அறிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாலிபரைக் கொன்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth hacked to murder with sickle in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->