முதல் காதலனை கொல்ல திட்டமிட்ட பெண்.. இரண்டாவது காதலன் கைது..!
youth arrested due to attempt Murder
முதல் காதலனை கொலை செய்ய முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் ஆசிபா இவருக்கும் அதே மருத்துவமனையில் பணியாற்றிவந்த நசீர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவரை கட்டாயப்படுத்தி என்பவருடன் திருமணம் நடத்தி வைத்தனர் சிறிது நாட்களிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இன்னிலையில் ரகுமான் என்பவர் ஆசிபாவிர்கு அறிமுகமானார். இருவருக்கும் இடையில் காதல் வளர்ந்தது இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு நசீர் இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
அதன்படி திருமணம் செய்துகொள்ள போவதாக ஆசிபா நசீர் இடம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போன்றவற்றை டெலிட் செய்ய வேண்டுமென அவரிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக அவரை ஒரு இடத்திற்கு வரவழைத்து அவரின் செல்போனை வாங்கி புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை அழித்துள்ளார்.
இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நசீர் மீது ரகுமான் காரை மோத விட்டார். இதில் படுகாயம் அடைந்த நசீர் அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது நடந்தது அனைத்தையும் தெரிவித்தர். இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஆசிபாவையும், ரகுமானையும் கைது செய்தனர்.
English Summary
youth arrested due to attempt Murder