குஜராத் : 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.! தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் பொடாட் பகுதி அருகே பகவான்பாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இது தொடர்பாக குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டங்களை நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, பொடாட் நகரில் உள்ள ஷிவ்நகர் பகுதியில் வசிக்கும் வைரம் பாலிஷ் செய்யும் தொழிலாளியான 39 வயதுடைய தேவ்சாக் பாய் சவுகான் என்பரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

மேலும் பிரேதப் பரிசோதனையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker arrested for 9 Year Old Girl Raped Murdered In Gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->